இலங்கையின் வளர்ச்சிப் பாதை எவ்வாறு அமைந்திருக்கின்றது?
அண்மையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை அணியினர் சிறப்பாகச் செயற்பட்டதாக சிலர் எண்ணம் கொண்டிருக்கலாம். அதில் நானும் அடங்குகின்றேன். ஆயினும் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும், ஏன் எமது அலுவலகத்தில் கூட காரசாரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் அனைவருமே அணியினது பெறுபேறுகள் விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாக்குகின்றது.
தமது கருத்துக்களில் வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் உலகின் பல்வேறு பாகங்களில் இருக்கும் எனது பல சகபணியாளர்களும், நண்பர்களும் போட்டிகளில் உற்சாகத்தை வெளிப்படுத்தியும் எதிரணிகளை ஆதரித்தும் போட்டிகளை ஆய்வுக்குட்படுத்தியும், போட்டியைப் பாதிக்கும் களத்திற்கு வெளியிலான அரசியல் நிலைகுறித்து கருத்துக்களை வெளிப்படுத்தியும், வெற்றி ஈட்டியவர்கள் தோல்வியடைந்தவர்கள் குறித்து தீர்ப்பிடும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்தியும், தமது ஆர்வத்தைக் கண்ணுற்றிருந்தேன். ஏனைய அணிகளுடன் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை அணியானது சர்வதேச ரீதியில் முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பெறவேண்டியது அத்தியாவசியமானது என்பதே இங்கு முக்கியமான விடயமாகும். எவ்வாறு பொருளாதாரம் வளர்ச்சி காண்கின்றது மற்றும் அங்கீரிக்கப்படுகின்றது என்பதற்கு இந்த ஒப்பீடானது பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஆகவே இந்த சிந்தனைகளை நினைவில் நிறுத்திவைத்துக்கொள்ளுங்கள்.
பத்திரிகைகள் இணையத்தளங்களில் பல கட்டுரைகளைப் படித்தபோது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துப் பகிர்வுகளை வாசித்தபோது ஒரு விடயம் தெளிவாக புலனாகியது. அது என்னவென்றால் இலங்கை எவ்வாறு வளர்ச்சி காண்கின்றது என்பது தொடர்பாக எந்தவகையிலான ஒருமித்த கருத்துக்களும் கிடையாது. இவற்றுடன் 4.4 சதவீத வளர்ச்சி வீதம் தொடர்பில் அபிவிருத்தியடைந்த நாடுகள் திருப்திப்பட்டுக்கொண்டாலும் இலங்கையில் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதற்கு மிகவும் குறைவானதாகவே நோக்கப்படும். இது வளர்ச்சி காண்கின்றதா என சிலர் கேள்வியெழுப்புகின்றனர். மாறாக அது தொடர்பில் பல்வேறு கருத்துநிலைப்பாடுகள் காணப்படுகின்றன. நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டுள்ள இந்த விடயம் தொடர்பில் குழப்பமான நிலைமைக்கு இது வழிகோலிநிற்கின்றது.